ஞாயிறு, 29 மார்ச், 2015

விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா?


சன் தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுவிட்டன என்று யார் சொன்னது? (சாரி நான் தான் எழுதினேனா?) இல்லை இல்லை அவை இருக்கின்றன சன் தொலைக் காட்சியின் நிகழ்ச்சி நிரல்படி அதாவது 6.15 க்கு அமுத மொழிகள்,  6.30 க்கு ராசிபலன்.  6.45 க்கு இந்த நாள் இனிய நாள் என்று தான்  29.3.2015 ஞாயிறு காலை வரை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் அந்த நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒளிபரப்பப் படவில்லை என்றே தோன்றுகிறது. வருகிற வாரங்களிலாவது இவற்றை இடம்பெறச் செய்வார்கள் என்று நம்புவோமா?

ஞாயிறு, 15 மார்ச், 2015

மாற்றம் வேண்டும் என்பதற்காகவே நல்லனவற்றைக் கூட மாற்றுவதா?


 ஞாயிறன்று காலை

சன் டீவியின் நிகழ்ச்சி நிரல்படி 6 மணிக்கு புத்தம் புதுசு, 6.15 க்கு அமுத மொழிகள்,,  6.30க்கு ,ராசிபலன், 6.45க்கு இந்த நாள் இனிய நாள் என்றுதான் இருந்தது. ஆனால் ஓளிபரப்பப்பட்டவை ஆலய வழிபாடு, ஆலயவழிபாடு ராசிபலன் மட்டுமே. சாலமன் பாப்பையா வழங்கும் அமுதமொழிகளும், சுகிசிவம் வழங்கும் இந்த நாள் இனியநாளும் காணாமல் போய்விட்டன. தினசரி திருக்குறள் மற்றும் பழைய இலக்கிய விளக்கங்களையும், இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியையும் ஒளி பரப்பியது ஒரு காலம்