திங்கள், 14 ஏப்ரல், 2014

மெகா தொடர்களுக்குப் பதில் சிறு தொடர்களை அதிகம் இடம் பெறச் செய்யலாமே

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

.. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘’மனம் திரும்புதே’’ நிகழ்ச்சியில் நடிகை சொர்ணமால்யாவின் பேட்டி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான்... ‘ என்ற பாடலை சொர்ணமால்யா தன் தோழிகளுடன் சேர்ந்து கர்நாடக இசையில் பாடி அதன் வரிகளை ராப் பாடலாகவும் பாடி அசத்தினார்.  கேள்விகளுக்கு மிகவும் கேஷுவலாகப் பதில் சொன்னதும் அருமை.