வெள்ளி, 9 டிசம்பர், 2011

கதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்

கிட்டதட்ட எல்லா

தொடர்களிலும் யாவது காணவில்லை என்று சொல்வதும் அவரைத்தேடுவதுமாக கதையை நீட்டிப்பதைப் பற்றி எழுதியிருந்தேன். சில தொடர்களில் இன்னும் மோசமாக இருக்கிறது.

மாதவி என்ற தொடரில் கதாநாயகி மாதவியையே காணவில்லை இறந்து விட்டார் என்று சொல்லி சில நாட்கள் சென்ற பிறகு அவர் சாகவில்லை என்று கதையை வளர்த்தார்கள். செல்லமே தொடரில் கதாநாயகனையே காணவில்லை என்று தேடி பிறகு கிடைத்து விட்டார் என்று கதையை வளைத்தார்கள். தங்கம் தொடரில் கதாநாயகன் செல்வ கண்ணனையே இறந்ததாகக் காண்பித்து பின்னர் உயிரோடு இருப்பதாகக் காண்பித்தார்கள்.

இப்போது திருமதி செல்வம் தொடரில் கதாநாயகன் செல்வத்தைக் காணவில்லை என்று தேடி அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி அவருக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து முடித்துவிட்டார்கள். ஓரிரு நாட்களிலேயே அவர் ஆந்திரா கடற்கரையோரம் மயக்கத்தில் கிடந்தார் என்று சொல்லி கதையைத் திருப்பிவிட்டார்கள்.

ஒரு கதையில் கதாநாயகனை அல்லது கதாநாயகியை இறந்த்தாகச் சொல்வதை சிறு குழந்தைகூட நம்பாதே. அப்படியிருக்க கதாநாயக, நாயகியரை இறந்ததாக எப்படித்தான் கதையை அமைக் கிறார்களோ இந்த இயக்குனர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.